Monday, 23 July 2018

தோழிகள் ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா: என் புருசன் கூட சண்டை போட பயமா இருக்கு.

விமலா: அடிச்சுப் போடுவாரா?

அமலா: இல்ல சமையல்ல உப்ப அதிகமாப் போட்டு பழிவாங்குவாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பெண் 1 : தட்டு போட்டு உட்கார்ந்த உடனே என் கணவருக்குச் சாப்பாடு போட்டுடணும் இல்லைன்னா ரொம்பக் கோபம் வரும்.

பெண் 2 : ஏன் ?

பெண் 1 : கஷ்டப்பட்டு சமைச்சு வெச்சிற அவருக்கு இதுகூடப் பண்ணலைன்னா பின்ன கோபம் வராதா ?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விமலா : என் மாமியாரும், நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு

அமலா : ஏன்?

விமலா : வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னு தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகுப்படுத்த ஒரு ஐடியா சொல்லு.

விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விமலா : என் மாமியார் பொறாமைப்படுறாங்க

அமலா : எதுக்கு ?

விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.

விமலா : எப்படி சொல்ற?

அமலா : உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கமலா : என்ன என் காதலர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்.

விமலா : என்ன சொல்லி ஏமாத்தினார்?

கமலா : சமைக்கத் தெரியும்-னு தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : சினிமாவுக்குப் பாட்டேழுதுகிறவரக் காதலிச்சது தப்பாப் போச்சு

விமலா : ஏன்?

அமலா : காதல் பேயே, பிசாசேன்னு வர்ணிக்கிறாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப் போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?

விமலா : தெரியாதே!

அமலா : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்-ல இருந்து தினமும் என்கூட சண்டை போடுறா.....

விமலா : ஏன் மாப்பிள்ளை பிடிக்கலைன்னா....?

அமலா : அப்படியெல்லாம் இல்ல. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விமலா : என் மாமியார் கூட இன்னிக்கு பெரிய சண்டை

அமலா : எதுக்கு?

விமலா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்-னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.

விமலா : எத வச்சு சொல்ற?

அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா : உங்க வீட்டு டி.வி-ல ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வி-ல படம் ஏன் சின்னதா தெரியுது ?

விமலா : அது செய்திச்சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கவிதா: எங்கப்பா யார் எது சொன்னாலும் நம்பிடுவார்.

சவிதா: சரி.. சுவர்ல ஜிமிக்கிய எதுக்கு மாட்டி வெச்சிருக்காரு.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

கவிதா: சுவருக்கும் காது உண்டு-னு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க அதான்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தோழி 1 : அவ்வளவு பெரிய கட்டுப்போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?

தோழி 2 : நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு சொன்ன.

தோழி 1 : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கீதா : ஏண்டி மாலா நீ ஏன் துவைக்கிற? வாஷிங் மெஷின் எங்க?

மாலா : அது ஆபீஸ் போயிருக்குடி !

கீதா : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மாலா : அவரு போலி டாக்டர்னு எப்படி அவ்வளவு தீர்மானமா சொல்ற?

மாலதி : பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், இதோட சேத்து மேக்-அப் டெஸ்ட், ஸ்க்ரீன் டெஸ்ட் இதெல்லாமும் எடுத்துட்டு வாங்கன்னாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

புனிதா: பால்காரரை காதலிக்கிறதா சொன்னே .. ஆனா அவர் லாண்டரிகாரராச்சே

கவிதா: ஆமாண்டீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சுட்டேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மதி: அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.

ரதி: நிஜமாவா .. ?

மதி: ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கீதா: நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

சீத்தா: ஓவியக் கலைன்னா படம் வரையறது.

கீதா: அப்ப தவக்களைன்னா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விஜயா: ஏன் திடீர்னு உன் மாமனாருக்கு 2வது கல்யாணம்னு சொல்ற?

சந்தியா: இவ்வளவு வருஷமா ஒரே மாமியாரோட சண்டை போட்டு ரொம்ப அலுப்பா இருக்கு!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இந்து: என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.

சிந்து: அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?

இந்து: தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கோம‌தி: பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்லமாட்டானா?

சும‌தி: அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!

கோம‌தி: ????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

லதா: என் மாமியார் சாவுக்கு நானே எல்லா காரியமும் பண்ண வேண்டியதாப் போச்சு!

மாலா: பாவம் எப்படி செத்தாங்க?

லதா: அதான் சொன்னேனே . . . நானே எல்லாம் செய்ய வேண்டியதாப் போச்சுன்னு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

திவ்யா: வர்றயா கடைவீதிக்கு போயிட்டு வரலாம்.

பிரியா: நான் மாமியாரை விட்டுட்டு வரமுடியாது.

திவ்யா: ஏன் அவங்க உடம்பு முடியாதவங்களா?

பிரியா: சீ! சீ! நான் சொல்றது மதியானம் 12.00 மணிக்கு டி.வி.ல வர்ற மெகாசீரியல் மாமியார் . . .

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வழ‌க்க‌றிஞ‌ர்: உன்னை கெட்டக்கெட்ட வார்த்தையில அ‌சி‌ங்கமா பே‌சினா‌ன்னு சொன்னியே, என்ன வார்த்தைன்னு ‌நீ‌திம‌ன்ற‌த்து‌ல சொல்லுங்க!

பெண்: மரியாதை உள்ள யாரும் அதை காது கொடுத்து கேக்க முடியாது சார்!

வழ‌க்க‌றிஞ‌ர்: அப்ப ‌நீ‌திப‌தி அய்யாகிட்ட மட்டும் அதை ரகசியமா சொல்லு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மனைவி: என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்.

சினேகிதி: அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்.

மனைவி: கோடீஸ்வரராக இருந்தார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சிந்து: மாப்பிள்ளை மருத்துவத் துறையில் பத்து வருஷமா இருக்கறதா சொல்லி என்னை ஏமாத்திட்டாரு.

இந்து: எப்படி சொல்ற?

சிந்து: அவரு பத்து வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மௌசிகா: உங்க அம்மாவ ஏன் மிஸ்ஸியம்மான்னு கூப்படற?

மௌனிகா: அவங்க அடிக்கடி எதையாவது தொலைச்சுக்கிட்டே இருப்பாங்க

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஜானகி: என் மருமகளுக்கு ரொம்பதான் கொழுப்பு..

மோகினி: ஏன் என்ன செஞ்சா?

ஜானகி: நான் பாலை வெச்சுப் பால் கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வெச்சு ரசுகுல்லா பண்ணுங்கிறா......

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கலா: அடுத்து நான் என்ன பாடணும்னு நீங்க ஆசைப்படறீங்க? கல்யாணியா? சிந்து பைரவியா? நீலாம்பரியா? காம்போதியா?

மாலா: மங்களம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வாணி: உங்க புடவை வெள்ளை வேளேர்ன்னு பள பளக்க என்ன உபயோகிறீங்க ..

ராணி: என்னோட கணவரை தான்..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காவ்யா: அந்த ஆள் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க.. .?

ஒவியா: என்னோட ப்ளட்ல யூரியா நிறைய இருக்கு.. அதனால தலைமுடி நல்லா வளரும்னு சொல்றாரே..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சீதா: என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

கீதா: எப்படி?

சீதா: என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லையே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ராகினி: எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை நடந்து இன்னியோட வருஷம் ஆறு ஓடிப்போச்சு

வாகினி: ஆறு வருஷமா உங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் கிடையாதா?

ராகினி: இன்னைக்கு அவுங்களோட 8-வது திவசம் டீ!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மதி: என் வீட்டுக்காரர் எங்கேயும் வேலைக்குப் போகலைனாக்கூட அவருக்கு பந்தாவுல ஒண்ணும் குறையில்லை..

ரதி: ஏன் ?

மதி: நான் சம்பளம் வாங்கிக் கொடுத்த உடனே போய் மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்துடுறாரு

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மதி: கராத்தே மாஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு?

ரதி: என்னாச்சு?

மதி: முதலிரவிலே ஆ- ஊ-ன்னு கத்தி என் மானத்தை வாங்கிட்டாரு

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விஜயா: செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு..

ஓவியா: ஏன்?

விஜயா: இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மாலா: வேகப் பந்து வீச்சாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா எப்படி?

கலா: ஏன்?

மாலா: பாஸ்ட் நைட் கொண்டாடிட்டார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கமலா: முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே என்ன ஆச்சு?

மாலா: டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?

மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பவி: சாம்பார கோல்ட் ஆக்கணும்ன என்ன பண்ணனும்?

சவி: 22 கேரட்டே உள்ள போடணும்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விமலா: ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா

அமலா: யாரு?

விமலா: மீனா தான்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இந்து: என் மகன் ஜெயில்ல இருக்கான்

சிந்து: ஏன்?

இந்து: ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்.

சிந்து: என்ன மொழிப் பிரச்சினை?

இந்து: தேன் மொழிய கெடுத்துட்டான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அமலா: என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்

விமலா: அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தாரணி: அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட செக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு

பூரணி: உடம்பு நல்லா இருந்தா?

தாரணி: பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சங்கி: அரசியல் வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு.

கீதா: ஏன்?

சங்கி: முதலிரவை சீரணி அரங்கத்துல வச்சுக்கலாம்னு சொல்றாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஜானகி: அவர் பயங்கர குடிகாரர்

மோகினி: இருக்கட்டும்

ஜானகி: அதுக்காக கை பம்புல தண்ணி அடிக்கிறப்பகூட ஊறுகாயைத் தொட்டுக்கணுமா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கலா: எங்க வீட்ல மாமியார் - மருமகள் சண்டை கூட டி.வி. சீரியல் மாதிரி ஆயிடுச்சு.

மாலா: எப்படி?

கலா: ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முதல்நாள் சண்டைலேர்ந்து கொஞ்சம் போட்டுக் காட்டுவாங்க!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கண்ணகி: உன் கணவர் வீட்டு வேலைய எல்லாம் முடிச்சுட்டாராம்?

மோகினி: உனக்கு எப்படித் தெரியும்?

கண்ணகி: இதோ பாரு கேபிள் டி.வி-யில் விளம்பரம் கொடுத்திருக்காரே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மாலா: ஆனாலும் அந்த டாக்டருக்கு ரொம்பத்தாண்டி நக்கல்.

விமலா: ஏண்டி?

மாலா: பல்லைப் பிடுங்கறப்போ வலிச்சா, பல்லை நல்லா கடிச்சிக்குங்கன்னு சொல்றாரே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விமலா: அவரு சரியான குடிகாரரா இருக்காரு.

மாலா: எப்படிச் சொல்றே?

விமலா: டாக்டர் கொடுத்த டானிக்கைகூட சோடா கலந்துதான் சாப்பிடறாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மாலதி: எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே ஏன்?

சாலினி: அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கமலா: பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா.. அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா?

விமலா: காபி பொடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க?

கமலா: ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இந்து: என் கணவருக்கும் எங்க வீட்டு வேலைக்காரிக்கும் தொடர்பு இருக்குமோனு சந்தேகமா இருக்கு.

சிந்து: எதை வைச்சு அப்படிச் சொல்றே?

இந்து: நான் என் கணவரைத் திட்டினா மனசு சரியில்லை-ன்னு அன்னிக்கி லீவு எடுத்துக்கிட்டு போயிடுறான்னா பாருங்களேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விஜி: ராப்பிச்சைக்கார கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா .. ஏன்?

மதி: நைட் ஆனா கெளம்பிடுறாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment