😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: உங்களை யாருன்னே எனக்கு தெரியாது, என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே, ஏன் ?
மற்றவர்: தெரிஞ்சவங்க கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்.....!!!
கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்த கேள்வி?
பெண் : கேழுப்பா
பையன் : எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போரீங்க?
பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு
பையன் : உங்க தங்கச்சியோட லவ்வர்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நவின்: ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டுவந்திருக்காங்க...?
கவின்: இன்னைக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னதை தப்பாப்புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
மற்றவர்: அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ஒருவர்: இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: ஏங்க மதுரைக்கு துரு பஸ் இருக்கா?
மற்றவர்: இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!
ஒருவர்: ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் ..
பாக்கி : ஏன்?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் ...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சாமினி: என்னடி சொல்றே உங்க வீட்டுல தங்கத்திலேயே குழம்பு வைக்கிறீங்களா?
சாலினி: ஆமாண்டி 24 கேரட் போட்டு குழம்பு வைகிறோமே!
சாமினி:????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
மற்றவர்: புருசன் சமையல் பண்ணக் கத்துக்கிறான், பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.
மற்றவர்: அப்படியா! எங்க வேலை பாக்குறீங்க?
ஒருவர்: கசாப்புக் கடையில!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: என்ன இது... ஷீட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா?
மற்றவர்: அவங்கல்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க... ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறங்க...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பார்த்திபன்: என்ன காலையில குறங்கு கூட வாக்கிங்கா?
வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை நாய்
பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்
வடிவேலு: அப்ப சரி
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?
மற்றவர்: ஏன்?
ஒருவர்: கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே..?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு..வேலையை விட்டு தூக்கிட்டாங்க!
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்: அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: கூட்ட நெரிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்!
மற்றவர்: அடப்பாவமே.. யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுகிட்டு இருந்தவரா..
ஒருவர்: இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தானேஷ்: என்னடா இவனோட கழுத்தறுப்பா போச்சே
சுரேஷ்: ஏன்டா என்னடா சொல்றான்
தானேஷ்: சாமிக்கு மொட்டை அடிக்கிறதா 8 முறை வேண்டிக்கிட்டனாம். 8 மொட்டையையும் ஒரே சமயத்தில் அடிச்சிட சொல்லி அடம்புடிக்கிறான்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு
மற்றொருவர் : லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
ஒருவர் : நீங்க வேற நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும், எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ரமனன் : சார், உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் வீட்டுக்கு வரலாமா?
முராரி : ஐயய்யோ, வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க ஆபீசுக்கே வந்துடுங்க ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கமலா : என்னது, உன் வீட்டுக்காரர் கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டே சாப்பிடறாரு?
விமலா : டாக்டர்தான் அவரை டைம் பார்த்து சாப்பிடச் சொல்லியிருக்காரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : ஏன் சார் படிக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கிறீங்க?
மற்றவர் : சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டே இருக்கான்!!
ஒருவர் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வரவேற்பாளர் : வாங்க..வாங்க.. நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா?பொண்ணு வீட்டுக்காரரா?
கண்ணன் : இல்லைங்க நான் பொண்னோட பழைய வீட்டுக்காரருங்க.
வரவேற்பாளர் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
லேடி : நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!
பிச்சைக்காரர் : ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.
லேடி : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : நீங்க கட்சியிலிருந்து விலகிட்டா, உங்க கட்சியோட பலம் பாதியாயிடும்னு எப்படிச் சொல்றீங்க ?
கட்சிக்காரர் : எங்க கட்சியில இருக்கிறதே, என்னையும் சேர்த்து ரெண்டு பேர்தான்!
ஒருவர் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
குமார் : உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது.
பக்கத்து வீட்டுக்காரர் : அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள் ?
குமார் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ராமு : அது என்ன டெய்லியும் பெப்சி பாட்டில்ல தண்ணி ஊத்துங்கன்னு பிச்சை எடுக்கும்போது சொல்லிட்டுப் போற ?
பிச்சைக்காரன் : நான்தான் அதிக தெருவுல பிச்சை எடுக்கறேன்னு பெப்சி கம்பெனி என்னை பிராண்ட் அம்பாசடரா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க சாமி !
ராமு : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சுரேஷ் : உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?
ஜோதிடர் : நீ காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.
சுரேஷ் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஊர்காரன் : அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இல்லையே!
வழியில் சென்றவர் : நான் ராமு இல்லைங்க.. கோபி.
ஊர்காரன் : அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்டியா?
வழியில் சென்றவர் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கந்தன் : செக்கு மாதிரி உழைக்கற பொண்ணா இருக்கணும்னு பாத்து கட்டினது தப்பா போச்சு.
பக்கத்து வீட்டுகாரர் : ஏன்..!! என்ன ஆச்சு..
கந்தன் : இப்போ என் பையன் செக்கு மாடா அவளை சுத்தி சுத்தி வர்றான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சோமு : சார் நீங்க எவ்வளவு ஃபீஸ் வாங்குறீங்க?
ஜோசியர் : மூணு கேள்விக்கு ஆயிரம் ரூபாய்.
சோமு : ரொம்ப அதிகமா இருக்கே?
ஜோசியர் : ஆமாம். சரி உன்னோட மூணாவது கேள்வியும் சீக்கிரம் கேட்டுரு.
சோமு : 😟 😟
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சாவு வீட்டில்: பத்து பேர் சேர்ந்து புகைப்படக்காரரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வழியில் சென்றவர்: ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க? என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
சாவு வீட்டில் ஒருவர்: பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ராணி : மன்னர் ஏன் படுக்கை அறையை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்?
சேவகன் : என் பின்னால் போர்வை வருகிறது மன்னா என்று தான் சொன்னேன். அதைக் கேட்டுத்தான் ஓடுகிறார் என்று தெரியவில்லை மகாராணி அவர்களே...
ராணி : நீ போர்வை என்று சொன்னது அவர் காதில் போர் என்று விழுந்திருக்கும். அதான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாப்பிள்ளை: ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?
பெண் வீட்டுக்காரங்க: பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மேனேஜரிடம், என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்! என்று பதட்டத்துடன் சொன்னார்.
மேனேஜர்: அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
வந்தவர்: ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன் வீட்டார்: நாங்கதான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோமோ பையன் ரொம்ப சிக்கனம்னு .. ..
மகள் வீட்டார்: இருக்கலாம் அதுக்காக ஹனிமூனுக்குகூட பெண்ணை விட்டுட்டு தனியாப் போறேன்னு செல்றது நல்லாயில்லே
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விடுதி உரிமையாளர்: ஒரு நைட்டுக்கு 200 ரூபா வாடகை. ஆனா நீங்களே படுக்கை செஞ்சுக்கற பட்சத்துல 100 ரூபாய்தான்.
வந்தவர்: சரி நானே படுக்கை செஞ்சுக்கறேன்
விடுதி உரிமையாளர்: அப்ப படுக்கைக்கு தேவையான பொருள் எல்லாம் 300 ரூபாய். எங்ககிட்ட வாங்கித்தான் ஆகணும்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: இந்த ஏரியாவுல இருக்குற வீட்டுல தண்ணி பஞ்சமே வராதுன்னு தரகர் சொன்னத நம்பி ஏமாந்துட்டேன்.
மற்றவர்: எப்படி?
ஒருவர்: அந்த வீடு கட்டியிருக்கிறதே ஏரிலதானே.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒருவன் இறந்து போனான். துக்கம் கேட்க போனார் சஞ்சய் சிங் அப்பொழுது,
சஞ்சய் சிங்: அழுது கொண்டிருந்த இரட்டையர்களில் ஒருவனிடம் போய், இறந்தது நீயா உன் சகோதரனா? என்றார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பூரணி: எல்லா கல்யாணத்துக்கும் போயிப்போய் உங்க அப்பாவுக்கு பைத்தியமே பிடிச்சிடிச்சின்னு நினைக்கிறேன்.
தாரணி: எப்படி சொல்றீங்க?
பூரணி: வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்தால் காக்காக்கும், குருவிக்கும் கல்யாணம்னு சொன்னேன். உடனே எந்த மண்டபத்துலன்னு கேட்டு கிளம்ப ரெடியாகுறார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வீட்டுக்காரர்: எனக்கு முன்னால வேஷ்டிய மடிச்சுக்கட்டற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருசசா?
வேலைக்காரன்: மடிச்சுக்கட்டல ஐயா, நீங்க எடுத்துக்கொடுத்த வேஷ்டி தண்ணில போட்டதும் இப்படி சுருங்கிடுச்சு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: யாருய்யா இது கிளினிக்குக்கு உள்ள ஜட்டியோட நுழையறது?
கிளினிக் வருபவர்: டாக்டர் நீங்க நல்லா ட்ரஸ்ஸிங் செய்வீங்களாமே. எனக்கு இன்னைக்கு கல்யாணம்... அதான்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பூஜா: அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா: அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
ஒருவர்: மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஜக்கு: ஞாபக மறதி போட்டில கலந்துகிட்டு, என்ன சொன்னாருன்னு முதல் பரிசு கொடுத்திருக்காங்க?
மக்கு: என்ன போட்டி இதுன்னு கேட்டாராம்..!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சிந்து: தெரியாத்தனமா, பூசணிக்காய் வியாபாரம் செய்யறவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டேன்.
இந்து: சமையல்ல பூசணிக்காயா?
சிந்து: அதில்ல. தாம்பூலப் பையில் ஆளுக்கொரு பூசணிக்காய்.. .தூக்கிட்டு வந்ததில் ரெண்டு கையும் செம வலி
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கலாம்..
மற்றொருவர்: அதுக்காக குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக் காட்டுறது கொஞ்சங்கூட நல்லாயில்ல!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆப்பிள் அழுது கொண்டு இருந்தது. அதற்கு,
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சிலந்தி 1: ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது?
சிலந்தி 2: அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பூனை: உன் வயசு என்ன?
யானை: பத்து வயசு பூனை. ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே
யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்
பூனை: எனக்கு 15 வயசு யானை. ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே
பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வந்தவர்: சார் நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா?
ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே தண்டவாளத்தில வந்தா போதும்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: இது கவர்ச்சி நடிகை ஆரம்பிச்சிருக்கிற ஓட்டலா?
மற்றொருவர்: எப்படி கண்டுபிடிச்சே?
ஒருவர்: ஜட்டிநாடு ஓட்டல்னு போட்டிருக்காங்களே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: அந்த டைரக்டர் இதுக்கு முன்னால பஸ் கண்டக்டரா இருந்திருப்பார் போலருக்கு?
மற்றொருவர்: எப்படி சொல்றே?
ஒருவர்: கட், கட்னு சொல்லாம ஸ்டாப், ஸ்டாப்-ங்கறாரே.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் பேசியது தப்பா போச்சு?
மற்றொருவர்: ஏன்? என்னாச்சு?
ஒருவர்: எங்க வீட்டு வேலைக்காரி என்னைத் தப்பா நினைச்சுட்டா.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: குருவே, சித்தியை அடைய ஒரு வழி சொல்லுங்கள் குருவே?
குரு: சித்தாப்பாவுக்கே துரோகம் செய்ய நினைக்கிறாயே, நீ உருப்படுவியா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: Tendulkar-உடைய தம்பி பேர் என்ன?
மற்றொருவர்: Ninedulkar.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணீங்க?
வக்கீல்: கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவன்: வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?
மற்றொருவன்: ஆமாம்! இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..அதான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது?
மற்றொருவர்: Sri Lanka.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: America-வுக்கு opposite என்ன?
மற்றொருவர்: Ameri-பழம்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment