Monday, 23 July 2018

நண்பர்கள் ஜோக்ஸ்

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : மச்சான் நீயே சொல்லு, என்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

நண்பன் 2 : அந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு அர்த்தம்.

நண்பன் 1 : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1: என் பொண்டாட்டி கையால விஷத்தக் கொடுத்தாகூட குடிச்சிடுவேன்டா.

நண்பன் 2 : உன் பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா?

நண்பன் 1: நீ வேற.. அவக்கூட வாழறதை விட, விஷத்தக் குடிச்சிட்டு சாகறது மேல்..

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : என் அம்மாவும், என் மனைவியும் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க!

சோமு : அப்படியா? எங்கே?

ராமு : என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிகிட்டேயும்......!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

நண்பன் 2 : சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?

நண்பன் 1 : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : டே‌ய் சோமு, ந‌ம்ம பாபு காசு இல்லாம ரொ‌ம்ப கஷ்டப்படறான்டா பாவம்?

சோமு : அதெப்படி உனக்கு தெரியும்?

ராமு : அவன் கிட்ட ஒரு 50 ரூபா கடன் கேட்டேன். இ‌ல்ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ன்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : எதையோ பத்தி ரொம்ப ஆழ்ந்து சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க போல......

சோமு : எதைப் பற்றி சிந்திக்கிறதுன்னுதான் சிந்திச்சிகிட்டிருக்கேன்! வேற என்ன?

ராமு : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : அது என்ன கூட்டிட்டு வாங்க கொண்டுட்டு போங்கன்னு விளம்பரம் வருது எதுக்கான விளம்பரம் அது?

நண்பன் 2 : அதுவா நம்ம டாக்டர் புதுசா நர்சிங் ஹோம் கட்டியிருக்காருல்ல அதுக்குத்தான்!

நண்பன் 1 : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ஜக்கு : என்னடா மக்கு கைல பைனாகுலர் வச்சிருக்க ?

மக்கு : நான் என் தூரத்து சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்..அதான்.

ஜக்கு : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

கேசவன் : ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு !

வாசு : ஏன் ?

கேசவன் : பிளேயர் சரியா விளையாடலைன்னா போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா-ன்னு சொல்றாரு !

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

கோபால் : என்ன பிரச்சனையாயிருந்தாலும் உங்க பாஸ் I dont mind அப்படீன்னு சொல்றாரே, பரவாலையே!

கிருபா : அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, அவருக்கு மூளையில்லங்கறதத்தான் இந்த லட்சணத்தில் சொல்றாரு.

கோபால் : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !

சோமு : அடடா...... அப்புறம்?

ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ரமேஷ் : சார், அவசரமா எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்!

ராமு : நீ யாருன்னே தெரியலையே தம்பி !

ரமேஷ் : இப்படிச் சொல்வீங்கன்னு தெரிஞ்சுதான், உங்க பொண்ணும், நானும் சேர்ந்து இருக்கிற போட்டோவைக் கையோட கொண்டு வந்திருக்கேன்.

ராமு : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ஜக்கு : என்னடா மக்கு ! ரொம்ப நேரமா வெறும் உடம்போட வெயில்ல நின்னுட்டு இருக்க ?

மக்கு : ரொம்ப வேர்வையா இருந்துச்சு... அதான் வெயில்ல நின்னா காஞ்சிருமில்ல !

ஜக்கு : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : என் பொண்டாட்டிக்கு கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடா !

சோமு : எத வச்சு அப்படி சொல்ற ?

ராமு : பேஸ்புக்ல நான் எனக்கு டைவர்ஸ் கிடைச்சுடுச்சுன்னு போட்டேன், அதுக்கு முதல்ல லைக் போட்டதே அவதான்னா பாத்துக்கயேன்!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : எங்க அப்பாவுக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு !

நண்பன் 2 : ஏன்? அப்படி என்ன சொன்னாரு உன்னைப் பார்த்து ?

நண்பன் 1 : வேலை இல்லாம சும்மா இருக்கற நேரத்துல அந்த ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணச் சொல்லுறாரு!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா ?

நண்பன் 2 : தெரியலயே......

நண்பன் 1 : பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்திடும் !

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

நண்பன் 2 : அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.

நண்பன் 1 : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : என் மகனும், கரண்ட்டும் ஒண்ணு..

சோமு : பையன் என்ன அவ்ளோ சுறுசுறுப்பா?

ராமு : ம்ஹூம்.. ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ஒருவர் : என்னங்க பொண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க?

மற்றவர் : நான் தான் சொன்னேன்ல.. பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

ஒருவர் : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1 : எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னயே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.

நண்பன் 2 : விட்றா, ஃபீல் பண்ணாத

நண்பன் 1 : இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ, உனக்கு தெரியாது.

நண்பன் 2 : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்-னு சொல்வாங்க. நீங்க இப்படி சிரிக்கிறீங்களே?

சோமு : தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு!

ராமு : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

சுரேஷ் : வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான் !

ரமேஷ் : நாலு செண்ட் தான்

சுரேஷ் : ஏன், ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கலாமே......

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : என் மனைவி செய்யற பொங்கல் பட்டாசா இருக்கும்?

சோமு : அவ்வளவு நல்லாவா இருக்கும்..?

ஒருவர் : நீ வேற! ரொம்ப ஆபத்துன்னு சொல்ல வந்தேன்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

அமலா: நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!

விமலா: எதை வைத்து?

அமலா: பேனாவை வைத்து தான் எழுதினேன்!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்.

சோமு : எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா. எப்படி ?

சோமு: காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

பெரியசாமி: எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.

சின்னசாமி: ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா ?

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?

சோமு: தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1: நம்ம கிரிக்கெட் டீம் அபாரமா ஜெயிடுச்சுன்னு ஏண்டா பொய் சொன்ன?

நண்பன் 2: உன் விக்கலை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலைடா!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

கமல் : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

அமல் : இல்லடா..

அமல் : பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

குமார்: டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?

கார்த்தி: சுனில் பவுடர்.

குமார்: என்ன செண்ட் யூஸ் பண்ணற?

கார்த்தி: சுனில் செண்ட்.

குமார்: என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?

கார்த்தி: சுனில் ஹேர் ஆயில்.

குமார்: ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?

கார்த்தி: இல்லடா, சுனில் என் ரூம் மேட்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: தீபாவளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?

சோமு: தீபாவளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1: Love marriage-க்கும், Arranged marriage-க்கும் என்ன வித்தியாசம்?

நண்பன் 2: நம்ம கிணத்தில விழுந்தா Love marriage, பத்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டா அது Arranged marriage

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராகுல்: ரொம்ப நாள் வாழ என்ன பன்னனும்

திகுல்: கல்யாணம் பன்னிக்கோ

ராகுல்: கல்யாணம் பன்னிக்கிட்டா ரொம்ப நாள் வாழலாமா

திகுல்: இல்லை. ஆனா, உனக்கு ரொம்ப நாள் வாழனுங்கிர எண்ணமே வராது

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: இந்த SMS-ஐ ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?

சோமு: இல்லையே!

ராமு: அதுசரி, சும்மாவா சொன்னாங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச

மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல போடச் சொன்னாரு

ஜக்கு: ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்-னு கேட்டேன்!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

சுரேஷ்: இதான் என்னோட குழந்தை

ரமேஷ்: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?

சுரேஷ்: அதைத்தான் நானும் கேக்கறேன். ஆனா, அது பேசறதே புரியமாட்டேங்குது.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1: ஏன் மச்சி உனக்கு SMS ப்ரீதானா? எனக்கு அடிக்கடி SMS அனுப்பேன்!

நண்பன் 2: சரி மாப்ள.. எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: அந்த ஆஸ்பத்திரியில நல்லா கவனிச்சுப்பாங்களாமே

குமாரு: அப்படியா?

ராமு: ஆமா ஊசி போட ஒரு நர்ஸ், தடவிவிட ஒரு நர்ஸ்-னு ரெண்டு பேர் இருக்காங்க!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1: புத்திசாலியா இருந்தாலே பிரச்சனை, என் செருப்பு அறுந்து போயிடுது

நண்பன் 2: புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?

நண்பன் 1: என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே...!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகள் மாற்றுவான்!

தாமு: அது பரவாயில்லையே, என் இளைய தம்பி ஒரு நாளைக்கு 6 தடவைகூட உடை மாற்றுவான்.

ராமு: நெஜமாவா சொல்ற.. அவனுக்கு என்ன வயசு இருக்கும்?

தாமு: என்ன பொறந்து 3 மாதம் தான் ஆகுது!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

சுரேஷ்: டெய்லி சமையல் நீங்கதான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவி தான் பத்த வைக்கிறாங்க, ஏன்?

தானேஸ்: அவதான் பத்தவைக்கிறதுல கில்லாடியாச்சே?

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமு: நா கம்ப்யூட்டர் வாங்கப் போறாண்ட விஜய்...

விஜய்: மச்சா, ஒரு தடவ நம்ம கைக்கு கம்ப்யூட்டர் வந்துட்டா, மொதல்ல fb போவோம் அப்புறம் நாசமா போவோம்!!!

ராமு: ???

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பன் 1: என் மச்சா இந்த முறையும் Lovers Day கொண்டாடல போல?

நண்பன் 2: எதுக்கு மச்சா எவனோ கட்டிக்கப்போற ஃபீகருக்கு எதுக்கிடா நாம விழா கொண்டாடனும்..

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

நண்பர்1: எதுக்குடா அவனை இந்த அடி அடிக்குற..?

நண்பர் 2: ஐசிஐசிஐ என்பதன் அர்த்தம் என்ன-னு கேட்டா.. நான் பார்க்க நான் பார்க்க நான்-னு சொல்லறான் பக்கிபய.....

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

சிவா: ஜனவரி-14 க்கும், பிப்ரவரி-14 க்கும் என்ன வித்தியாசம்?

ஜீவா: ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி-14! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி-14!!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ராமன்: என் மனைவி என்னை தெய்வமா மதிக்கிறாங்க.

தாமன்: அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

ஒருவர்: நிறுத்துங்க சார்.. ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க?

அப்பா: சும்மா இருங்க சார்.. Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

girl : எக்ஸாம் டைம்ல நாங்க டி.வி, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்.

boy : இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்.

girl : 😀😀

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

கோபால் : அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !

சோமு : ஏன் ?

கோபால் : எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

No comments:

Post a Comment