😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : மச்சான் நீயே சொல்லு, என்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
நண்பன் 2 : அந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு அர்த்தம்.
நண்பன் 1 : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1: என் பொண்டாட்டி கையால விஷத்தக் கொடுத்தாகூட குடிச்சிடுவேன்டா.
நண்பன் 2 : உன் பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா?
நண்பன் 1: நீ வேற.. அவக்கூட வாழறதை விட, விஷத்தக் குடிச்சிட்டு சாகறது மேல்..
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : என் அம்மாவும், என் மனைவியும் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க!
சோமு : அப்படியா? எங்கே?
ராமு : என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிகிட்டேயும்......!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?
நண்பன் 2 : சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?
நண்பன் 1 : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : டேய் சோமு, நம்ம பாபு காசு இல்லாம ரொம்ப கஷ்டப்படறான்டா பாவம்?
சோமு : அதெப்படி உனக்கு தெரியும்?
ராமு : அவன் கிட்ட ஒரு 50 ரூபா கடன் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : எதையோ பத்தி ரொம்ப ஆழ்ந்து சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க போல......
சோமு : எதைப் பற்றி சிந்திக்கிறதுன்னுதான் சிந்திச்சிகிட்டிருக்கேன்! வேற என்ன?
ராமு : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : அது என்ன கூட்டிட்டு வாங்க கொண்டுட்டு போங்கன்னு விளம்பரம் வருது எதுக்கான விளம்பரம் அது?
நண்பன் 2 : அதுவா நம்ம டாக்டர் புதுசா நர்சிங் ஹோம் கட்டியிருக்காருல்ல அதுக்குத்தான்!
நண்பன் 1 : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ஜக்கு : என்னடா மக்கு கைல பைனாகுலர் வச்சிருக்க ?
மக்கு : நான் என் தூரத்து சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்..அதான்.
ஜக்கு : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
கேசவன் : ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு !
வாசு : ஏன் ?
கேசவன் : பிளேயர் சரியா விளையாடலைன்னா போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா-ன்னு சொல்றாரு !
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
கோபால் : என்ன பிரச்சனையாயிருந்தாலும் உங்க பாஸ் I dont mind அப்படீன்னு சொல்றாரே, பரவாலையே!
கிருபா : அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, அவருக்கு மூளையில்லங்கறதத்தான் இந்த லட்சணத்தில் சொல்றாரு.
கோபால் : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !
சோமு : அடடா...... அப்புறம்?
ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ரமேஷ் : சார், அவசரமா எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்!
ராமு : நீ யாருன்னே தெரியலையே தம்பி !
ரமேஷ் : இப்படிச் சொல்வீங்கன்னு தெரிஞ்சுதான், உங்க பொண்ணும், நானும் சேர்ந்து இருக்கிற போட்டோவைக் கையோட கொண்டு வந்திருக்கேன்.
ராமு : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ஜக்கு : என்னடா மக்கு ! ரொம்ப நேரமா வெறும் உடம்போட வெயில்ல நின்னுட்டு இருக்க ?
மக்கு : ரொம்ப வேர்வையா இருந்துச்சு... அதான் வெயில்ல நின்னா காஞ்சிருமில்ல !
ஜக்கு : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : என் பொண்டாட்டிக்கு கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடா !
சோமு : எத வச்சு அப்படி சொல்ற ?
ராமு : பேஸ்புக்ல நான் எனக்கு டைவர்ஸ் கிடைச்சுடுச்சுன்னு போட்டேன், அதுக்கு முதல்ல லைக் போட்டதே அவதான்னா பாத்துக்கயேன்!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : எங்க அப்பாவுக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு !
நண்பன் 2 : ஏன்? அப்படி என்ன சொன்னாரு உன்னைப் பார்த்து ?
நண்பன் 1 : வேலை இல்லாம சும்மா இருக்கற நேரத்துல அந்த ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணச் சொல்லுறாரு!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா ?
நண்பன் 2 : தெரியலயே......
நண்பன் 1 : பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்திடும் !
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?
நண்பன் 2 : அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.
நண்பன் 1 : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : என் மகனும், கரண்ட்டும் ஒண்ணு..
சோமு : பையன் என்ன அவ்ளோ சுறுசுறுப்பா?
ராமு : ம்ஹூம்.. ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ஒருவர் : என்னங்க பொண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க?
மற்றவர் : நான் தான் சொன்னேன்ல.. பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
ஒருவர் : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1 : எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னயே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.
நண்பன் 2 : விட்றா, ஃபீல் பண்ணாத
நண்பன் 1 : இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ, உனக்கு தெரியாது.
நண்பன் 2 : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்-னு சொல்வாங்க. நீங்க இப்படி சிரிக்கிறீங்களே?
சோமு : தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு!
ராமு : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
சுரேஷ் : வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான் !
ரமேஷ் : நாலு செண்ட் தான்
சுரேஷ் : ஏன், ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கலாமே......
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : என் மனைவி செய்யற பொங்கல் பட்டாசா இருக்கும்?
சோமு : அவ்வளவு நல்லாவா இருக்கும்..?
ஒருவர் : நீ வேற! ரொம்ப ஆபத்துன்னு சொல்ல வந்தேன்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
அமலா: நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
விமலா: எதை வைத்து?
அமலா: பேனாவை வைத்து தான் எழுதினேன்!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்.
சோமு : எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா. எப்படி ?
சோமு: காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
பெரியசாமி: எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி: ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா ?
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?
சோமு: தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1: நம்ம கிரிக்கெட் டீம் அபாரமா ஜெயிடுச்சுன்னு ஏண்டா பொய் சொன்ன?
நண்பன் 2: உன் விக்கலை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலைடா!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
கமல் : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?
அமல் : இல்லடா..
அமல் : பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
குமார்: டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
கார்த்தி: சுனில் பவுடர்.
குமார்: என்ன செண்ட் யூஸ் பண்ணற?
கார்த்தி: சுனில் செண்ட்.
குமார்: என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
கார்த்தி: சுனில் ஹேர் ஆயில்.
குமார்: ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
கார்த்தி: இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: தீபாவளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?
சோமு: தீபாவளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1: Love marriage-க்கும், Arranged marriage-க்கும் என்ன வித்தியாசம்?
நண்பன் 2: நம்ம கிணத்தில விழுந்தா Love marriage, பத்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டா அது Arranged marriage
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராகுல்: ரொம்ப நாள் வாழ என்ன பன்னனும்
திகுல்: கல்யாணம் பன்னிக்கோ
ராகுல்: கல்யாணம் பன்னிக்கிட்டா ரொம்ப நாள் வாழலாமா
திகுல்: இல்லை. ஆனா, உனக்கு ரொம்ப நாள் வாழனுங்கிர எண்ணமே வராது
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: இந்த SMS-ஐ ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
சோமு: இல்லையே!
ராமு: அதுசரி, சும்மாவா சொன்னாங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச
மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல போடச் சொன்னாரு
ஜக்கு: ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்-னு கேட்டேன்!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
சுரேஷ்: இதான் என்னோட குழந்தை
ரமேஷ்: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?
சுரேஷ்: அதைத்தான் நானும் கேக்கறேன். ஆனா, அது பேசறதே புரியமாட்டேங்குது.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1: ஏன் மச்சி உனக்கு SMS ப்ரீதானா? எனக்கு அடிக்கடி SMS அனுப்பேன்!
நண்பன் 2: சரி மாப்ள.. எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: அந்த ஆஸ்பத்திரியில நல்லா கவனிச்சுப்பாங்களாமே
குமாரு: அப்படியா?
ராமு: ஆமா ஊசி போட ஒரு நர்ஸ், தடவிவிட ஒரு நர்ஸ்-னு ரெண்டு பேர் இருக்காங்க!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1: புத்திசாலியா இருந்தாலே பிரச்சனை, என் செருப்பு அறுந்து போயிடுது
நண்பன் 2: புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?
நண்பன் 1: என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே...!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகள் மாற்றுவான்!
தாமு: அது பரவாயில்லையே, என் இளைய தம்பி ஒரு நாளைக்கு 6 தடவைகூட உடை மாற்றுவான்.
ராமு: நெஜமாவா சொல்ற.. அவனுக்கு என்ன வயசு இருக்கும்?
தாமு: என்ன பொறந்து 3 மாதம் தான் ஆகுது!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
சுரேஷ்: டெய்லி சமையல் நீங்கதான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவி தான் பத்த வைக்கிறாங்க, ஏன்?
தானேஸ்: அவதான் பத்தவைக்கிறதுல கில்லாடியாச்சே?
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமு: நா கம்ப்யூட்டர் வாங்கப் போறாண்ட விஜய்...
விஜய்: மச்சா, ஒரு தடவ நம்ம கைக்கு கம்ப்யூட்டர் வந்துட்டா, மொதல்ல fb போவோம் அப்புறம் நாசமா போவோம்!!!
ராமு: ???
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பன் 1: என் மச்சா இந்த முறையும் Lovers Day கொண்டாடல போல?
நண்பன் 2: எதுக்கு மச்சா எவனோ கட்டிக்கப்போற ஃபீகருக்கு எதுக்கிடா நாம விழா கொண்டாடனும்..
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நண்பர்1: எதுக்குடா அவனை இந்த அடி அடிக்குற..?
நண்பர் 2: ஐசிஐசிஐ என்பதன் அர்த்தம் என்ன-னு கேட்டா.. நான் பார்க்க நான் பார்க்க நான்-னு சொல்லறான் பக்கிபய.....
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
சிவா: ஜனவரி-14 க்கும், பிப்ரவரி-14 க்கும் என்ன வித்தியாசம்?
ஜீவா: ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி-14! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி-14!!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ராமன்: என் மனைவி என்னை தெய்வமா மதிக்கிறாங்க.
தாமன்: அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
ஒருவர்: நிறுத்துங்க சார்.. ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க?
அப்பா: சும்மா இருங்க சார்.. Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
girl : எக்ஸாம் டைம்ல நாங்க டி.வி, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்.
boy : இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்.
girl : 😀😀
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
கோபால் : அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !
சோமு : ஏன் ?
கோபால் : எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
No comments:
Post a Comment