Sunday, 22 July 2018

கணவன் மனைவி ஜோக்ஸ்

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : சசி ஒரு கப் காப்பி...!

மனைவி : என்னது.....?

கணவன் : உனக்கு காப்பி தரட்டுமானு கேட்டேன்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?

கணவன்: கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடித்தாய்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க

கணவர்: எப்படி சொல்ற?

மனைவி: பாருங்க!குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?

கணவர்: நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்... கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க..!

கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி...!

மனைவி : ???

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா.... கண்ண மூடி பத்து நிமிஷம் யோசிக்கணும்.......

மனைவி: ஏன்?

கணவன்: அப்பத்தான், யார் மேல பழியப் போடலாம்னு மனசு சொல்லும்!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : உங்ககிட்ட தாலி கட்டிண்டு இந்த 8 வருஷத்துல என்னாத்தக் கண்டேன்?

கணவன் : நீ என்னாத்தக்கண்டயோ இல்லியோ, நான் முழு எமகண்டம்,7-1/2 சனில்லாம் பாத்தாச்சு!!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.

மனைவி: ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?

மனைவி : நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி... ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன் : ஒண்ணுமில்ல!

மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

மனைவி : ???

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க ?

கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : நான் பொங்கல் வெச்சதும் எங்கே கிளம்பிட்டீங்க..?

கணவன் : போய் கலெக்டர்கிட்ட நம்ம வீட்டை வெல்லம் (வெள்ளம்) பாதித்த பகுதியா அறிவிக்கணும்-னு ஒரு மனு தந்துட்டு வந்துடறேன்..!

மனைவி : ??????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க ?

கணவன் : நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா ?

மனைவி : ???????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன்: நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

மனைவி: ?????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க ?

கணவன் : ஏன் உனக்கு சொல்லணும் ?

மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவாங்க??

கணவன்: Unmarried-னு சொல்லுவாங்க...

மனைவி: யோவ் நில்லுய்யா ஓடாத!!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..

கணவன்: அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.. பத்திரமா இருக்கும்..

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க??

கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்..

மனைவி: ?????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க....

கணவன் : நீ என்ன சொன்னே?

மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு, வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்-னு சொன்னேங்க.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன்: வேற என்னதான் போட்ட?

மனைவி: பேசாம பட்டிணி போட்டேன்

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு

கணவன்: எப்படி சொல்ற?

மனைவி: சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?

கணவன் : ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை !!!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : ஒரு மணி நேரமா ரூம்ல எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே. பேசாமல் கண்ணாடியை போட்டுட்டு தேட வேண்டியது தானே?

கணவன் : அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.

மனைவி : ????????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க.

கணவன் : அவரை எதுக்கு கேட்கணும் ?

மனைவி : டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே, அதே சாம்பார்தான் இன்னிக்கும்.

கணவன் : சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : என்னங்க... திருடன் பாட்டுக்கு நம்ம வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான், நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க?

கணவன் : சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?

கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே !

மனைவி : ??????????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடியே உங்க அம்மாவை வரச் சொல்லுங்க.

கணவன் : எதுக்குடி ?

மனைவி : நம்ப வீட்டு வேலைக்காரி லீவு எடுத்துட்டு ஊருக்குப் போறாளாம்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : கணவன் மனைவி சண்டைனா நாலு சுவத்துக்குள்ளாத்தான் இருக்கனும்.. சரியா

கணவன் : அப்ப, தப்பிச்சு ஓடக்கூட எனக்கு உரிமையில்லாயா..

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : ஏங்க, நம்ம பையனுக்கு உடனே ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அவனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு

கணவன் : எப்படிச் சொல்ற?

மனைவி : அவனோட ரூம்ல போய் பாருங்க.. சமையல் செய்வது எப்படினு புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கான்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : பின்னாடி Figure இருந்தா கண்ணுக்கூட தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான்.. நீங்க சிரிக்கிறீங்க?

கணவன் : உன்னை பொய் figure-ன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல.. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்..

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

பிச்சைக்காரன் : மேடம், பாக்க நீங்க சமந்தா மாதிரியே இருக்கீங்க.

மனைவி : இந்த குருடனுக்கு 10 ரூபா கொடுங்க, ப்ளீஸ்..!

கணவன்: 100 ரூபாயா கொடுடீ... சத்தியமா இவன் குருடன்தான் !

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : என்னங்க நீங்க புதிய 2000 ரூபாய் நோட்டு மாரிங்க.

கணவன் : நா அவ்வளவு மதிப்புள்ளவனாடி செல்லம்..

மனைவி : நீங்க வேற மாத்தவும் முடியல, தூக்கி எறியவும் முடியல.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : ராத்திரி திருடன் வந்து என்னை மிரட்டினப்ப நீங்க ஏன் வாயே திறக்கலை?

கணவன் : உன்னையே அந்த மிரட்டல் மிரட்டினானே... அவன் எவ்ளோ பெரிய வீரனா இருப்பான்னு நினைச்சு பயந்துட்டேன்.

மனைவி : ?????????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே.... அதைச் சொல்ல நீங்க யாரு?

கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்னு சொல்றீயா?

மனைவி : இல்ல, நான் தான் சொல்லுவேன் இனிமே வராதேன்னு.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : மனிதனைப் போலவே கரடி குறட்டை விடும்னு, ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சு இருக்காங்களாமே ?

மனைவி : இதுக்கு ஏன் ஆராய்ச்சி பண்ணனும் ? நீங்க தூங்கறதைப் பார்த்த அப்படித்தானே இருக்கு ?

கணவன் : ????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : காலெண்டர்-ல அப்படி என்னடி பாக்குற?

மனைவி : பல்லி விழும் பலன் பாக்குறேங்க !

கணவன் : அது சரி பல்லி எங்க விழுந்துச்சு?

மனைவி : நீங்க சாப்புடுற சாம்பார்ல தான்...

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்ற? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பெண் கோலத்துல இருந்தே..?

மனைவி : ???????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா ?

மனைவி : ஆமாங்க ஏன் கேட்கிறீங்க ?

கணவன் : அதுவா, தெரு ஓரத்தில் ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது. அதான் கேட்டேன்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...

டாக்டர் : அவரைப் பகல் வேளையில கொஞ்சம் பேசவிடுங்க.

மனைவி : ????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : காலையில காப்பி குடிக்கறதை ஏன் நிறுத்திட்டீங்க?

கணவன் : காப்பி குடிச்சுட்டு ஆபிஸ் போனா தூக்கம் வரமாட்டேங்கறது.

மனைவி : ????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ஸ்ரீராமஜெயம் கூட சரியா எழுதத் தெரியல. ரமாஜெயம்-னு எழுதறான்.

கணவன்: அவன் சரியாத்தாண்டி எழுதறான். அது பக்கத்து வீட்டுப் பொண்ணு பேரு.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோங்க.

கணவன்: சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..

மனைவி: எதுக்குங்க..

கணவன்: பிச்சை எடுக்க தான்..

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : என்னங்க இது கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க.

கணவன்: நான்தான் அப்பவே சொன்னேனே. பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : நேத்திக்கு ஒரு படம் பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு பாதி உயிர் போயிடுச்சு.

கணவன் : அப்படியா? எனக்காக இன்னும் ஒரே ஒரு தடவை அந்தப் படத்தை போய் பாரேன் ப்ளீஸ்.

மனைவி : ???????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : எதிர்த்த வீட்டுக்காரர் அவரோட மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கித் தரார். நீங்களும் இருக்கீங்களே !!

கணவன் : எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ, மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு...

மனைவி : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன் : ஏன், அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

கணவன் : ???????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?

மனைவி : உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?

கணவன் : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?

மனைவி : நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..

கணவன்: ????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவர் : டாக்டர்... என் பொண்டாட்டி அவசரத்துல பெப்சின்னு நினைச்சிட்டு பெப்சி பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர் ?

டாக்டர் : ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போயிடும்..

கணவர் : ???

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.

கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.

மனைவி: ????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: அன்பே.. இன்று நமது கல்யாண நாள். எப்படி கொண்டாடுவது?

கணவன்: 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்..

மனைவி: ??????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே.. என்ன போட்ட?

மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்...

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல

மனைவி: தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா?

மனைவி: இல்லே.... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் சாப்பிட்டுகிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் சாப்பிட்டாரு அதான்....

கணவன்: ???????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?

மனைவி: எனக்கு கரடி பாசை புரியலேன்னு அர்த்தம்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு?

மனைவி : ஏங்க?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?

மனைவி: நீங்க தானே சொன்னீங்க! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே ?

மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : லதா... எதுக்கு நீ வெள்ளிக்கிழமை மட்டும் ரொம்ப ருசியா சமைக்கிற?

மனைவி : அன்னைக்கு தானே உங்கம்மா சாப்பிடாம விரதம் இருக்காங்க!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே.. கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா ?

கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன் ?

மனைவி : ?????????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது ?

மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க !

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.

மனைவி : ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க ?

கணவன் : பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடுன்னு திருடன் கரெக்ட கேட்டானே.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : தொப்புன்னு சத்தம் கேட்டுதே... கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா !

மனைவி : முடியாது ! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது !

கணவன் : ????????????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க.

மனைவி : எதுக்காம் ?

கணவன் : நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் சங்கு சக்கரம் சுத்தமாட்டேங்குது !

மனைவி : முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு !

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : நீ தான் எனக்கு மனைவியா வருவன்னு எங்க ஸ்கூல் மிஸ் அப்பவே சொன்னங்க.

மனைவி : எப்படி சொன்னாங்க..

கணவன் : பண்ணி மேய்க்க தான் நீ லாயக்குன்னு சொன்னங்க

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?

மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்-னு வேண்டிகிட்டேன். நீங்க?

கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்-னு வேண்டிகிட்டேன்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : என்னங்க.. உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..

மனைவி : எதுக்கு இவ்ளோ அவசரம்?

கணவன் : உங்க அம்மாவையும், அக்காவையும் என்னாலே தனியா சமாளிக்க முடியல..!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கிருந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்.

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சு அடிச்சேன்.

கணவன் : ?????????????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : 1000 தான் இருந்தாலும் நீ எனக்கு பொண்டாட்டி!!

மனைவி : அப்படினா என்ன நீங்க செல்லாகாசுனு சொல்றீங்களா.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : என்னங்க... நம்மக்கிட்ட தான் மாத்தரதுக்கு 500,1000 நோட்டு இல்லையே அப்புறம் ஏன் பேங்க்கு கிளம்புரிங்க.

கணவன் : நான் கடன் கேட்டப்ப இல்லைனு சொன்ன எத்தன பேரு நோட்ட மாத்த பேங்குல நிக்கிறானு பாத்துட்டு வரத்தான்.

மனைவி : ??????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?

கணவன் : அது ஒரு இறந்த காலம்....

மனைவி : ???????????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : எங்கடி சட்டைல வெச்சிருந்த 100 ரூபாயக் காணம்.

மனைவி : நீங்க தானே புள்ள பரிச்சைக்குப் போறேன்னதுக்கு 10, 20-ன்னு எடுக்கக்கூடாது, 100 எடுக்கனும்னீங்க

அப்பா : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்-னு சொன்னான், நீ ஏண்டி முழிக்கிறே ?

மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறததை.

கணவன் : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : பையன் புல்லாங்குழல் கேட்டான் வாங்கப் போயிட்டு திரும்ப வந்துட்டீங்களே, ஏன்?

கணவன் : முழுவதும் ஓட்டையா இருக்கிறதக் கொடுத்தான் வேணாமுன்னு வந்துட்டேன்.

மனைவி : ??????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : டிவி-ல ஜல்லிக்கட்டு பாக்குறிங்கலே ! அவ்ளோ ஆர்வம்னா நேரில போய் மாட்டை அடக்க வேண்டியது தானே!

கணவன் : கட்டுன மாட்டையே அடக்க முடியல... இதுல கட்டாத மாட்டை எப்படி அடக்குறது??

மனைவி : ???

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி இல்லை?

மனைவி : இப்போதெல்லாம் யாரும் உங்களை கச்சேரி பண்ண கூப்படறதே இல்லயே..அதான்!

மனைவி : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி இல்லை?

மனைவி : இப்போதெல்லாம் யாரும் உங்களை கச்சேரி பண்ண கூப்படறதே இல்லயே..அதான்!

மனைவி : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும் வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க ?

மனைவி: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.. ?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : ஏன்டி நான் வீட்டுக்குள்ள வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கற?

மனைவி : டாக்டர் தான் சொன்னாரு, தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கன்னு

கணவன் : ??????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு என் ஆபிசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : ம்ம்ம்... நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். அதான் நீங்களாவது ஆபிஸ்ல இருக்கீங்களான்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.

கணவன் : ???????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன் : இன்னுமா சமையல் ஆகலே? நான் ஓட்டலுக்கு போறேன்.

மனைவி: ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ ...

கணவன் : அதுக்குள்ளே ஆகிடுமா ?..

மனைவி : இல்லே, நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.

கணவன் : ?????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவர் : WIFE - க்கு என்ன அர்த்தம் தெரியுமா? - Without Information, Fighting Everytime!

மனைவி: இல்லை டார்லிங் அதற்கு அர்த்தம் With Idiot For Ever

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவர் : இன்னிக்கு சண்டே ! நல்லா என்ஜாய் பண்ணப் போறேன். அதுக்குத்தான் 3 சினிமா டிக்கெட் வாங்கியிருக்கேன் .

மனைவி : எதுக்கு மூணு?

கணவர் : உனக்கும், உன்னோட அப்பா, அம்மாவுக்கும்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?

மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி: என்னை பெண் பார்க்க வந்தன்னிக்கு நீங்க டிபனை சாப்பிடவேயில்லையே ஏன்?

கணவன்: ஒரு நாளைக்கு ஒரு ஷாக் போதுமேன்னு நினைச்சேன்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

மனைவி : டின்னர் வேணுமா?

கணவன் : சாய்ஸ் இருக்கா?

மனைவி : ரெண்டு இருக்கு!

கணவன் : என்னன்ன?

மனைவி : வேணுமா? வேண்டாமா?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

No comments:

Post a Comment